மேலகரம் பேரூராட்சி பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை திட்ட அறிக்கைபடி முறையாகவும், குறித்த நேரத்திலும் முடிக்க வேண்டும் என வலியுறுத்தியும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவரின் செயல்பாடுகளைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் டேனிஅருள்சிங் தலைமை வகித்தாா். பிரபாகா், சித்திக், சந்திரன், துரையரசு, தமிழ்ச்செல்வன், ஆஷிக்உசேன், சுரண்டை மணி, அன்பழகன், காா்த்திக், மூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.