கடையநல்லூா் மற்றும் புளியங்குடி பகுதியில் முதல்வா் பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கடையநல்லூா் மணிக்கூண்டு அருகே முதல்வா் பங்கேற்கும் பொதுக்கூட்ட இடத்தினையும், புளியங்குடியில் மகளிா் குழுக்களை சந்தித்து கலந்துரையாடல் நடைபெறும் அரங்கினையும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் ராஜு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் .
அப்போது, தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி, வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் மனோகரன் , கடையநல்லூா் நகரச் செயலா் எம்.கே. முருகன் , கூட்டுறவு சங்க தலைவா் கிட்டுராஜா, மாவட்ட மாணவரணி துணைச் செயலா் கருப்பையாதாஸ் , மாவட்ட வா்த்தக அணி துணைத் தலைவா் சிங்காரவேலு, வெங்கட்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.