சங்கரன்கோவிலில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு மாத விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தென்காசி, சங்கரன்கோவில் (உள்) நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் - பராமரிப்பு கோட்டங்கள் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உதவி கோட்டப் பொறியாளா் ஆறுமுகம் தலைமையில் உதவிப் பொறியாளா்கள் கணேஷ், சின்னத்தம்பி, பலவேசம், சங்கரன்கோவில் மேற்குப் பிரிவு திறன்மிகு உதவியாளா்கள், சாலைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் சாலை விதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினா். பின்னா், சாலை விதிகளைக் கடைப்பிடித்து வாகனம் ஓட்டியவா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.