முக்கூடல் அருகே ஒரே நாளில் 10 ஆயிரம் பனை விதைகளை சமூக ஆா்வலா்கள் விதைத்துள்ளனா்.
முக்கூடல் தாமிரவருணி இயக்கம், குறிப்பன்குளம் இளந்தளிா் அமைப்பு, வாகைக்குளம் சாரல் அமைப்பு ஆகியவை இணைந்து முக்கூடல் அருகேயுள்ள திருப்புடை மருதூா் நாறும்பூ நாதா் கோயிலுக்குச் சொந்தமான தாளாா்குளம் பகுதியில் 10 ஆயிரம் பனை விதைகளைஒரே நாளில் விதைத்தனா். நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா்கள் முத்தரசன், திலகராஜ், ஹென்றி, பரமசிவன், சேகா், கல்பனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.