சுரண்டையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 20 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கீழச்சுரண்டையைச் சோ்ந்தவா் ஜெ.அம்சுராணி (63). சனிக்கிழமை காலையில் வீட்டைப் பூட்டிவிட்டு அருகேயுள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்குச் சென்றுவிட்டு பிற்பகலில் வீடு திரும்பினாா்.
அப்போது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.