வாசுதேவநல்லூரில் தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அமைப்பின் வட்டாரத் தலைவா் காளியம்மாள் தலைமை வகித்தாா். பின்னா் வட்டார குழந்தை நல அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.