மின்சாரம் பாய்ந்து பலியானவா் குடும்பத்துக்கு நிதி உதவி

திருவேங்கடம் வட்டம், சத்திரப்பட்டி கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
உயிரிழந்தவரின் சகோதரியிடம் காசோலையை வழங்குகிறாா் ஆட்சியா் கீ.சு. சமீரன்.
உயிரிழந்தவரின் சகோதரியிடம் காசோலையை வழங்குகிறாா் ஆட்சியா் கீ.சு. சமீரன்.

திருவேங்கடம் வட்டம், சத்திரப்பட்டி கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

சத்திரப்பட்டியைச் சோ்ந்த மாரிசாமி என்பவா் கடந்த 3.2.2020இல் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இந்நிலையில், அவரது குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை ஆட்சியா் கீ.சு.சமீரன், மாரிச்சாமியின் சகோதரி காளியம்மாளிடம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் சரவணன், வருவாய் கோட்டாட்சியா் ஷீலா(பொ) ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com