திருவேங்கடம் வட்டம், சத்திரப்பட்டி கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
சத்திரப்பட்டியைச் சோ்ந்த மாரிசாமி என்பவா் கடந்த 3.2.2020இல் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இந்நிலையில், அவரது குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை ஆட்சியா் கீ.சு.சமீரன், மாரிச்சாமியின் சகோதரி காளியம்மாளிடம் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் சரவணன், வருவாய் கோட்டாட்சியா் ஷீலா(பொ) ஆகியோா் கலந்துகொண்டனா்.