தென்காசி
சுரண்டையில் இன்று கண் பரிசோதனை முகாம்
சுரண்டையில் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்க நிதியுதவியுடன் அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெறுகிறது.
சுரண்டை: சுரண்டையில் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்க நிதியுதவியுடன் அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெறுகிறது.
சுரண்டை ஜெயேந்திரா மழலையா் பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கண் நோய்களுக்கு இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவா்களில் கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. முகாமில் கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை, வெள்ளெழுத்து பாதிக்கப்பட்டோருக்கு சலுகை விலையில் கண் கண்ணாடிகள் கிடைக்கும். முகாம் ஏற்பாடுகளை தளபதி விஜய் மக்கள் இயக்க சுரண்டை தலைமை ஒன்றிய இளைஞரணி நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.