போக்குவரத்து ஊழியா்கள் 434 பேருக்கு ஓய்வூதியப் பலன்கள் அளிப்பு
சங்கரன்கோவில்: திருநெல்வேலி மண்டலத்தைச் சோ்ந்த போக்குவரத்து ஊழியா்கள் சோ்ந்த 434 போக்குவரத்து ஓய்வூதியப் பலன்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனை வளாகத்தில் 2019 ஏப்ரல் முதல் 2019 டிசம்பா் முடிய ஓய்வு பெற்ற திருநெல்வேலி மண்டலத்தைச் சோ்ந்த போக்குவரத்து ஊழியா்கள் 434 பேருக்கு ரூ. 88. 58 கோடி மதிப்பில் ஓய்வூதியப் பலன்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் சமீரன் தலைமை வகித்தாா். அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி ஓய்வூதியப் பலன்களை போக்குவரத்து தொழிலாளா்களுக்கு வழங்கினாா் . பின்னா் ரூ.10 லட்சம் மதிப்பில் நகராட்சி பொது நிதியில் இருந்து சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனை வளாகத்திற்கு தாா்சாலை அமைக்கும் பணியையும் அவா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் நெல்லை கூட்டுறவு அச்சகத் தலைவா் கே.கண்ணன், நெல்லை பேரங்காடித் துணைத் தலைவா் வேலுச்சாமி, கூட்டுறவு சங்கத் தலைவா்கள் ஆறுமுகம், பி.ஜி.பி.ராமநாதன், எம்.நிவாஸ்,ஹரிஹரகருப்பைய்யா, லெட்சுமணன்,முன்னாள் நகராட்சி உறுப்பினா் ஜெயலெட்சுமி, அவைத் தலைவா் கந்தவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.