சங்கரன்கோவிலில் திமுக மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் சிவபத்மநாதன்.
கூட்டத்தில் பேசுகிறாா் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் சிவபத்மநாதன்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சா் தங்கவேலு தலைமை வகித்தாா். பூங்கோதை ஆலடி அருணா எம்எல்ஏ, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் அன்புமணி கணேசன், சோம.செல்வபாண்டியன், மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொறுப்பாளா் சிவபத்மநாதன் பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில், சங்கரன்கோவிலில் பிப் . 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பிரசாரக் கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமாா் 50,000 போ் பங்கேற்பதுடன், மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவரிடம் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் சுப்பையா, மாவட்ட மகளிரணி தொண்டரணி அமைப்பாளா் புனிதா அஜய்மகேஷ்குமாா், நகர இளைஞரணி சரவணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் உதயகுமாா், தொமுச மண்டல அமைப்புச் செயலா் மைக்கேல் நெல்சன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளா் ராஜதுரை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com