சுரண்டையில் விஸ்வகா்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில் கொடை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, கோயிலில் அம்மன் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியும், அதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வாக, செவ்வாய்க்கிழமை (பிப். 2) மாலையில் குற்றால தீா்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி, பால்குட ஊா்வலம் ஆகியவை நடைபெறும். தொடா்ந்து, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சுரண்டை திரவியநகா் விஸ்வகா்மா சமுதாய நிா்வாகிகள் செய்துவருகின்றனா்.