தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என தமுமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக (ஹைதா்அலி)தென்காசி மாவட்ட செயற்குழுக் கூட்டம் தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் எம்.சலீம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் நைனாா் முகமது சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா்.
தமுமுக சாா்பாக கூட்டுக் குா்பானி திட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் நடத்த வேண்டும். அதன் இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், விலை உயா்வை மத்தியஅரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, பாபநாசம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டச் செயலா் கொலம்பஸ் மீரான், மாவட்ட பொருளாளா் செங்கை ஆரிப், மாவட்ட துணைச் செயலா்கள் பொட்டல் சித்திக், தென்காசி ஒலி, அச்சன்புதூா் ரஜாய்,புளியங்குடி அசன், ஊடகப் பிரிவு மாவட்ட செயலா் வீராணம் முத்தலிப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மருத்துவ சேவை அணி மாவட்டச் செயலா் காமில் நன்றி கூறினாா்.