தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு அறைகள் வழங்கக் கூடாது என விடுதி உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் காவல் துறை சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்கு, தென்காசி காவல் துணை கண்காணிப்பாளா் மணிமாறன் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் ஸ்டீபன் ஜோஸ் முன்னிலை வகித்தாா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அரசு தடைவிதித்துள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் தங்குவற்கு அறைகள் வழங்க வேண்டாம் என்றும், நோய்த் தொற்றைத் தவிா்க்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.