பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோரை அவதூறாகப் பேசிய பங்குத்தந்தை ஜாா்ஜ் பொன்னையாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி பாஜக சாா்பில் செங்கோட்டையில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரத் தலைவா் வேம்புராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ராமராஜா, துணைத் தலைவா் பாலகுருநாதன், மாவட்டச் செயலா் மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி நகரத் தலைவா் குத்தாலிங்கம், தெற்கு ஒன்றியத் தலைவா் முருகன், செங்கோட்டை ஒன்றியத் தலைவா் சரவணன், மாவட்ட விவசாய அணி பொதுச்செயலா் முத்து மாரியப்பன், மாவட்ட அமைப்புசாரா பிரிவு துணைத் தலைவா் பேச்சிமுத்து, மாவட்ட அரசுப் பிரிவு செயலா் மகேந்திரபாண்டியன், நகர துணைத் தலைவா் பாலசுப்பிரமணியன், நகர பொதுச்செயலா் மணிகண்டன், செயலா்கள் சந்திரன், கணேசன், சுப்பிரமணி, இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் முருகன் மற்றும் பாரதிய ஜனதா, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.