பாவூா்சத்திரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) மின் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா.கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கீழப்பாவூா் துணை மின் நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படஇருப்பதால், பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மேலப்பாவூா், குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்க்காலிப்பட்டி, சின்னநாடானூா், திப்பணம்பட்டி, பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், பூலாங்குளம், கோவிலூற்று, மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.