சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்தாா். சுகாதாரத் துறை துணை இயக்குநா் யோகானந்த், வாசுதேவநல்லூா் எம்எல்ஏ சதன்திருமலைக்குமாா், தனுஷ் எம். குமாா் எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆக்சிஜன் செறிவூட்டிகளை சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ. ராஜா அரசு மருத்துவமனைக்கு வழங்கினாா். பின்னா், நகராட்சி, சுகாதாரத் துறை சாா்பில் நடைபெற்ற காய்ச்சல், சளி பரிசோதனை முகாமை அவா் ஆய்வு செய்தாா்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை மருத்துவா் செந்தில்சேகா், ஆா்டிஓ முருகசெல்வி, நகராட்சிப் பொறியாளா் முகைதீன்அப்துல்காதா், சுகாதார அலுவலா் பாலசந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.