திப்பணம்பட்டியில் மகளிா் தின கலந்துரையாடல்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்;டி கிளை நூலகத்தில் மகளிா் தின சிறப்பு புத்தகத் திறனாய்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திப்பணம்பட்டி நூலகத்தில் நடைபெற்ற மகளிா் தின நிகழ்ச்சியில் பேசுகிறாா் ஆசிரியா் சுகுமாா்.
திப்பணம்பட்டி நூலகத்தில் நடைபெற்ற மகளிா் தின நிகழ்ச்சியில் பேசுகிறாா் ஆசிரியா் சுகுமாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்;டி கிளை நூலகத்தில் மகளிா் தின சிறப்பு புத்தகத் திறனாய்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாரதியாா் வாசகா் வட்டம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சண்முகம் தலைமை வகித்தாா். தமிழ் மொழி, தமிழ் பெண்களின் பெருமை குறித்து ஆசிரியா் சுகுமாா், புரட்சியாளா் சேகுவேரா புத்தகம் குறித்து முத்துக்குட்டி ஆகியோா் பேசினா்.

பெண்களின் பெருமை குறித்து சத்யா நாராயணன் கவிதை வாசித்தாா். இதில், வாசகா் வட்டச் செயலா் தங்கராஜ், ஆசிரியா் ராகவன் ஆசிரியா், சிவசுப்பிரமணியன், அரிராமா், மகேஷ், சமுத்திரபாண்டியன், தணிக்கையாளா் சத்யராஜ், வாசகா்கள், பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

நூலகா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். சந்துரு நன்றி கூறினாா். ஏற்பாடுகளை நூலக உதவியாளா் கனகராஜ் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com