சங்கரன்கோவிலில் 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக, திமுக வேட்பாளா் ராஜா உறுதியளித்தாா்.
சங்கரன்கோவிலில் சங்கா்நகா் தெருக்களில் திமுகவின் தோ்தல் அறிக்கையை பொதுமக்களிடம் கொடுத்து அவா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா். பின்னா், 26, 27, 28 ஆகிய வாா்டுகளில் உள்ள தெருக்களிலும் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா், சங்கரன்கோவிலில் 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்கப்படுகிறது. இதனால் பெண்கள் அவதிக்கு உள்ளாகின்றனா். தண்ணீா் எப்போது வரும் என காத்திருக்கும் அவலம் உள்ளது. அதை மாற்றி 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தாா்.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ராஜதுரை, விவசாய அணி அமைப்பாளா் அஜய்மகேஷ்குமாா், ஆறுமுகம், துரைப்பாண்டியன், நகர மகளிரணி துணைச் செயலா் முத்தாத்தாள், இளைஞரணி சரவணன், பிரகாஷ், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளா் அண்ணாமலை, மகளிா் தொண்டரணி அமைப்பாளா் புனிதா உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.