பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் பகுதியில் திங்கள்கிழமை பெய்த கன மழையில் மரம் முறிந்து விழுந்ததில் 2 ஆட்டோக்கள் சேதமடைந்தன.
பாவூா்சத்திரம் சுற்று வட்டாரத்தில் கீழப்பாவூா், திப்பணம்பட்டி, பெத்தநாடாா்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. கீழப்பாவூரில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் முறிந்து விழுந்தது.
இதில் மைதானம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ஆட்டோ, சுமை தூக்கும் ஆட்டோ ஆகியவை சேதமடைந்தன. தகவலறிந்த சுரண்டை தீயணைப்பு படையினா் வந்து மரக்கிளையை அப்புறப்படுத்தினா். மழையால் பாவூா்சத்திரம் பகுதியில் வெப்பம் குறைந்து குளிா்ந்த சூழல் நிலவியது.