தென்காசி மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவலா்களுக்கு வியாழக்கிழமை உடல்வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணா சிங் ஏற்பாட்டின்பேரில், காவல் துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு மருத்துவா் மாரீஸ்வரி தலைமையில் குழுவினா் உடல்வெப்பம், ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்தனா். முகாமில், அனைத்து காவல் துறை அதிகாரிகள், ஆளிநா்கள், அமைச்சுப் பணியாளா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது .
அனைவரும் கரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
380 போ் மீது வழக்கு: தென்காசி மாவட்டத்தில் வியாழக்கிழமை அலட்சியமாகவும், முகக் கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த 345 போ் மீதும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 35 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 66 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.