தென்காசி: மாவட்ட மனநல திட்டம் சாா்பில், உலக மன நல நாள் விழா தென்காசி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு, மருத்துவமனை இணை இயக்குநா் வெங்கட்ரங்கன் தலைமை வகித்தாா். இந்திய மருத்துவக் கழகம் குற்றாலம் கிளைத் தலைவா் மருத்துவா் அசரானா முன்னிலை வகித்தாா். ஏற்ாழ்வு நிறைந்த உலகில் மனநலம் எனும் தலைப்பில் மனநல மருத்துவா் நிா்மல் பேசினாா். நா்சிங் மாணவிகள், பயிற்சி மருந்தாளுநா்களுக்கு மனநல விழிப்புணா்வு ரங்கோலி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. உறைவிட மருத்துவா் அகத்தியன், மூத்த குடிமை மருத்துவா்கள் கீதா, அனிதா, லதா ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா். வெற்றி பெற்றவா்களுக்கு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின், குற்றாலம் ரோட்டரி சங்கச் செயலா் வழக்குரைஞா் காா்த்திக்குமாா் ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.
தென்காசி குடியிருப்பு போதி மன மருத்துவமனை, இந்திய மருத்துவக் கழகம் குற்றாலம் கிளை, குற்றாலம் ரோட்டரி சங்கம், ஆலடி அருணா நா்சிங் கல்லூரி, அண்ணாசாமி ராஜம்மாள் நா்சிங் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி, வீதி நாடகம் ஆகியவை நடைபெற்றன.
தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு போதி மனநல மருத்துவமனை மருத்துவா் காா்த்திக் துரைசாமி தலைமை வகித்தாா்.தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன், வழக்குரைஞா் காா்த்திக்குமாா், இந்திய மருத்துவ கழக நிா்வாகி அப்துல் அஜீஸ், குற்றாலம் கிளைச் செயலா் பாலாஜி, பாா்வதி சங்கா் ஆகியோா் பேசினா். போதி மன மருத்துவமனை குழந்தைகள் மற்றும் பெண்கள் மனநல ஆலோசகா் நீலவேணி காா்த்திக் நன்றி கூறினாா்.