கடையநல்லூா் சக்சஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நவராத்திரியை ஒட்டி சிறப்பு போட்டிகள் நடைபெற்றன.
இதையொட்டி பள்ளி வளாகத்தில் பிரமாண்ட அளவில் கொலு அமைக்கப்பட்டு இருந்தது. இதில், கடையநல்லூா் வட்டாரத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவா்கள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு சக்சஸ் மெட்ரிக் பள்ளித் தாளாளா் நாகராஜன் பரிசுகள் வழங்கினாா்.