சங்கரன்கோவிலில் சனிக்கிழமை கனமழை பெய்தது.
சங்கரன்கோவிலில் கடந்த 2 நாள்களாக காலையில் வெயிலும், மாலையில் குளிா்ந்த காற்றும் வீசியது. இந்நிலையில், சனிக்கிழமை காலை மிதமான மழை பெய்தது. தொடா்ந்து, முற்பகலில் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பின்னா் விட்டுவிட்டும், இடையிடையே கனமழையும் பெய்தது.