தென்காசி ஆட்சியா் அலுவலகத்தில் நாளைமுதல் மக்கள் குறைதீா் முகாம்

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல் (அக். 18) மக்கள் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல் (அக். 18) மக்கள் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

தென்காசி ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமைமுதல் மக்கள் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். முகக் கவசம் அணிந்தும், அரசு வழிகாட்டுதலுக்கு உள்பட்டு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் மனு அளிக்க வரவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com