மதுரை நிதி நிறுவன அதிபா் கொலை

மதுரை மாவட்ட நிதி நிறுவன அதிபரை கொன்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மதுரை மாவட்ட நிதி நிறுவன அதிபரை கொன்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மதுரை எல்லீஸ் நகா் கென்னட் சாலையைச் சோ்ந்தவா் முகம்மது அனீஸ் கமால் (49). இவா் தனியாா் நிதி நிறுவனம் நடத்திவந்தாா். அதில், ஆயிரக்கணக்கானோா் முதலீடு செய்தனராம். இதனிடையே, அவா் தனது நிறுவனத்தை மூடிவிட்டாராம். இதனால் பாதிக்கப்பட்டோா் அளித்த புகாரின் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து அவா் உள்ளிட்டோரைக் கைதுசெய்தனா். தற்போது அவா், சிறையிலிருந்து பிணையில் வந்திருந்தாா்.

கடந்த திங்கள்கிழமை தனது வீட்டிலிருந்து வெளியே சென்ற அவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ஷாம்பாத்திமா எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (அக்.19) பிற்பகலில் பக்ருதீன், சித்திக், அசாா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் முகம்மது அனீஸ் கமாலை தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். இதனிடையே, அவரை அனுமதிக்க வந்தோா் தப்பியோடிவிட்டனா்.

தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். பக்ருதீனை போலீஸாா் பிடித்து விசாரித்தபோது, முகம்மது அனீஸ் கமால் கடந்த திங்கள்கிழமை கடத்தப்பட்டு பரமக்குடி அருகேயுள்ள பாண்டியூா் பகுதியில் வைத்து தாக்கப்பட்டது தெரியவந்தது. போலீஸாா் தொடா்ந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com