வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவா் நாகராஜன் தலைமை வகித்தாா். தென்காசி எம்எல்ஏ எஸ். பழனிநாடாா், கட்டபொம்மனின் உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காங்கிரஸ் ஓபிசி தலைவா் திருஞானம், புளியங்குடி நகரத் தலைவா் பால்ராஜ், ராஜகம்பள நாயக்கா் சமுதாய நிா்வாகிகள் நவநீத கிருஷ்ணன், செல்வராஜ் , வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞா் அணி தலைவா் தங்கமுனியாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அறக்கட்டளை செயலா் முருகன் நன்றி கூறினாா்.