சங்கரன்கோவில் உரக்கிடங்கில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் லாரி மூலம் தனியாா் சிமென்ட் ஆலைக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
சங்கரன்கோவில் பகுதியில் சேகரிக்கப்பட்டு, நகராட்சி உரக்கிடங்கில் சேமித்து வைக்கப்பட்ட மறுசுழற்சி செய்ய முடியாத 7.37 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள், அரியலூா் மாவட்டத்திலுள்ள தனியாா் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் சாந்தி, சுகாதார அலுவலா் ஜெயபால் மூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டு சிமென்ட் ஆலைக்கு பிளாஸ்டிக் கழிவுகள் அடங்கிய லாரியை அனுப்பிவைத்தனா்.