பாவூா்சத்திரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கடையம் ஒன்றியக்குழுச் செயலா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
ஆலங்குளம் தாலுகா செயலா் குணசீலன், கீழப்பாவூா் ஒன்றியக்குழு செயலா் தங்கம் முன்னிலை வகித்தனா். மாநிலக்குழு உறுப்பினா் சுகந்தி பேசினா். மாவட்டக்குழுச் செயலா் முத்துப்பாண்டி, செயற்குழு உறுப்பினா் வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கலா நன்றி கூறினாா்.