சுரண்டை அருகேயுள்ள கருவந்தாவில் பனைத் தொழிலாளா் சங்க மூன்றாவது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு சங்கத் தலைவா் வைரக்கண் தலைமை வகித்தாா். செயலா் ஆரோக்கிய இஸ்ரவேல், பொருளாளா் அருணாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் பனைமரங்களை வெட்ட தடை விதித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நலிந்தோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
சங்க உறுப்பினா்கள் சாமுவேல் செல்வராஜ், வேலுச்சாமி, சுப்பிரமணியன், அகமது நிஷா, மிராசு, கண்ணன், சேது சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.