தென்காசி மாவட்ட காவல் அதிகாரிகள், காவலா்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணிபுரியும் 28 நபா்களுக்கு சேமநல நிதி வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் பணிபுரிந்து காவலா் சேமநலநிதி உதவித்தொகை வேண்டி மனு சமா்ப்பித்த காவல் அதிகாரிகள், காவல் ஆளிநா்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளா்கள் உள்பட 28 நபா்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ், உதவித்தொகையை வழங்கினாா்.
பணியின்போது, உயிரிழந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்கள் குடும்பத்துக்கும், குடும்பத்தினரின் இறப்புக்கான ஈமசடங்கு நிவாரண நிதியும், உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சை பெற்ற நபா்களுக்கும் வழங்கப்பட்டது.