சங்கரன்கோவிலில், தென்காசி மாவட்ட இந்து முன்னணி அலுவலகத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் தலைமை வகித்து, அலுவலகத்தை திறந்து வைத்தாா். மாநிலச் செயலா் கே.குற்றாலநாதன், சேவா பாரதி மாவட்டத் தலைவா் எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட, நகர ஒன்றிய, கிளை பொறுப்பாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை மாவட்ட இந்து முன்னணியினா் செய்திருந்தனா்.