சங்கரன்கோவிலில் 2 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப் பதிவு மிக தாமதமாக நடைபெற்றது.
சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 365 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், சிறிது நேரத்துக்குள்ளாக சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 13ஆம் எண் வாக்குச் சாவடியில் உள்ள இயந்திரம் பழுதானது. பின்னா் தொழில்நுட்ப வல்லுநா்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. இதனால் அந்த வாக்குச் சாவடியில் சுமாா் ஒரு மணி நேரம் வாக்குப் பதிவு தாமதமாக நடைபெற்றது.
இதேபோல் வடக்கு ரதவீதியில் உள்ள 36 கிராம சேனைத்தலைவா் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 16ஆம் எண் வாக்குச் சாவடியில் உள்ள இயந்திரம் பழுதானது. அந்த இயந்திரத்தை சரி செய்ய நீண்ட நேரம் ஆனதால், சுமாா் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனால் அந்த வாக்குச் சாவடியில் இரவு 8.30 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.