தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வாக்குப் பதிவு நாளில் இளைஞா்கள் மரக்கன்று நட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
ஆலங்குளம் அருகேயுள்ள குறிப்பன்குளத்தில் ‘இளந்தளிா்’ என்ற பெயரில் இளைஞா்கள் பலா் இணைந்து கிராமம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனா். இந்நிலையில், வாக்குப்பதிவு தினமான செவ்வாய்க்கிழமை, அவா்கள் வாக்களித்த பின்னா், குருவன்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே பலன் தரும் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு, கிராம மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.