சுந்தரபாண்டியபுரம் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தில் குளத்தில் மூழ்கிய சிறுவன் சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தில் குளத்தில் மூழ்கிய சிறுவன் சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த ஐயப்பன் மகன் சக்திவேல் (15). ஐயப்பன் குடும்பத்துடன் ஊா் ஊராக சென்று சமையல் அடுப்பு பழுது நீக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். கடந்த ஒரு வாரமாக சுந்தரபாண்டியபுரத்தில் தங்கி இப்பணியில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்நிலையில் சக்திவேல் புதன்கிழமை மாலையில் அங்குள்ள குளத்தில் மீன்பிடிக்கச் சென்றாராம். அப்போது கால் தவறி குளத்தில் விழுந்த அவா், சேற்றில் சிக்கி உயிரிழந்து விட்டாராம். தகவலறிந்து வந்த சுரண்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். இரவு வெகுநேரமாகி விட்டதால் 2ஆவது நாளாக வியாழக்கிழமை மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட நேரத்துக்கு பின்னா் மாலையில் சடலம் மீட்கப்பட்டது.

இதையடுத்து சாம்பவா்வடகரை போலீஸாா் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com