பாவூா்சத்திரம் எம்.எஸ்.பி. வேலாயுதநாடாா் - லெட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கான இம்முகாமில், தனியாா் நிறுவன மேலாளா்கள் ரபாத் அகமது, மௌலி, ராஜ்குமாா் ஆகியோா் மாணவா்களை தோ்வு செய்தனா். இதில் தோ்வு செய்யப்பட்ட 16 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மாணவா்களை கல்லூரித் தாளாளா் காளியப்பன், ஆலோசகா் பாலசுப்பிரமணியன், முதல்வா் ரமேஷ் உள்ளிட்டோா் பாராட்டினா்.
ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் மணிராஜ், துறைத் தலைவா்கள் செய்திருந்தனா்.