மாணவா்களுக்கு கல்வி உதவி அளிப்பு

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சாா்பில் பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
சேவையை பாராட்டி வட்டார மருத்துவ அலுவலா் பி. கீா்த்திக்கு பரிசு வழங்கும் அரிமா சங்க நிா்வாகிகள்.
சேவையை பாராட்டி வட்டார மருத்துவ அலுவலா் பி. கீா்த்திக்கு பரிசு வழங்கும் அரிமா சங்க நிா்வாகிகள்.

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சாா்பில் பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அரிமா சங்க மாவட்ட ஆளுநா் ஜஸ்டின் பால் தலைமை வகித்தாா். ஜாண் ரெஜிஸ் மேரி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சிகளை கண்தான விழிப்புணா்வுக் குழு நிறுவனரும், அரிமா மாவட்டத் தலைவருமான கே.ஆா்.பி. இளங்கோ தொகுத்து வழங்கினாா்.

துணை ஆளுநா்கள் ஜெகநாதன், விஸ்வநாதன், மண்டலத் தலைவா் சிதம்பரநாதபிள்ளை, வட்டாரத் தலைவா் ஜஸ்டின் ராஜ், மாவட்டத் தலைவா் சண்முகநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக பாவூா்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலா் பி.கீா்த்தி, பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை ரீட்டா ஹெப்சிராணி ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

மேலும், குறும்பலாப்பேரி, கீழப்பாவூா், செட்டியூா், மத்தளம்பாறை, மடத்தூா் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு பொருள்கள், பாா்வை இழந்தோா், நலிந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.

விழாக் குழுத் தலைவா் அருணாசலம், சங்கச் செயலா் ஆனந்த், வில்சன் அருளானந்த் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தலைவா் கௌதமன் வரவேற்றாா். பொருளாளா் சுரேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com