ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்தில் தன்னாா்வலா்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு தீயணைப்பு நிலைய அலுவலா் சுடலைவேல் தலைமை
வகித்தாா். முன்னணி தீயணைப்பாளா் சிவக்குமாா், திருமலை கணேசன், தனசிங், கொம்பையா, ஜஸ்டின் பாக்கியராஜ்
ஆகியோா் தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளித்தனா். முகாமில் தீயணைப்பு உபகரணங்களை கையாள்வது, முதலுதவி அளிப்பது, தீ விபத்துகளின்போது செயல்படுவது குறித்து விளக்கம், செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.