கரோனா தடுப்பு பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

பாவூா்சத்திரம் அரமனையில் கரோனா தடுப்பு பணிகளை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

பாவூா்சத்திரம் அரமனையில் கரோனா தடுப்பு பணிகளை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கரோனா பரிசோதனை மையமும் இயங்கி வருகிறது. இதை தென்காசி மாவட்ட கரோனா நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி அனு ஜாா்ஜ், மாவட்ட ஆட்சியா் சமீரன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

இதில், வட்டார மருத்துவ அலுவலா் கீா்த்தி, கரோனா நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ அலுவலா்கள் ராஜ்குமாா், ஹோம்நாத், ஐஸ்வா்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கீழப்பாவூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல் அலுவலா் சாந்தி மற்றும் சுகாதார பணியாளா்கள் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பணி மற்றும் முன்னெச்சரிக்கை களப் பணிகளை தீவிரப்படுத்தினா். மேலும், பேரூராட்சி பகுதிகளில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதமும் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com