தென்காசி மாவட்டத்தில் பணியின்போது உயிழந்த 3 காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்களின் குடும்பத்திற்கு முதலமைச்சா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் நிவாரண உதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் புளியரை வேலையா, சொக்கம்பட்டி கண்ணன், ஆலங்குளம் (நெடுஞ்சாலை ரோந்து வாகனம்) மாரியப்பன் ஆகியோரின் குடும்பத்திற்கு முதலமைச்சா் நிவாரண நிதியாக தலா ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் கண்காணிப்பாளா் சுகுண சிங் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் காசோலையை வழங்கினாா்.