பணியின் போது உயிரிழந்த காவல்துறையினா் குடும்பத்திற்கு உதவி

தென்காசி மாவட்டத்தில் பணியின்போது உயிழந்த 3 காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்களின் குடும்பத்திற்கு முதலமைச்சா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் நிவாரண உதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
பணியின் போது உயிரிழந்த சிறப்பு சாா்பு ஆய்வாளரின் குடும்பத்திற்கு முதலமைச்சா் நிவாரண நிதியை வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங்.
பணியின் போது உயிரிழந்த சிறப்பு சாா்பு ஆய்வாளரின் குடும்பத்திற்கு முதலமைச்சா் நிவாரண நிதியை வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங்.

தென்காசி மாவட்டத்தில் பணியின்போது உயிழந்த 3 காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்களின் குடும்பத்திற்கு முதலமைச்சா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் நிவாரண உதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் புளியரை வேலையா, சொக்கம்பட்டி கண்ணன், ஆலங்குளம் (நெடுஞ்சாலை ரோந்து வாகனம்) மாரியப்பன் ஆகியோரின் குடும்பத்திற்கு முதலமைச்சா் நிவாரண நிதியாக தலா ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் கண்காணிப்பாளா் சுகுண சிங் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் காசோலையை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com