வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களுக்கு தடையில்லா மின் இணைப்பு வழங்க வேண்டும் என திமுக கூட்டணிக் கட்சியினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
தென்காசி மாவட்ட ஆட்சியரிடம், திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் அளித்த மனு:
தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் யுஎஸ்பி பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்களும் தனித்தனி அறையில் 5 அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 8 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை இரவு 4 நிமிடம் கண்காணிப்பு அறையிலுள்ள தொலைக்காட்சியில் காப்பு அறையில் மின்சாரம் தடைபட்டது
தெரிந்துள்ளது. ஆனால் கண்காணிப்பு அறையில் மின்சாரம் தடைபடவில்லை. ஏன் அவ்வாறு நடந்து என்று தெரியவில்லை.
காப்பு அறையில் உள்ள 8 சிசிடிவி கேமராக்களுக்கும் இன்வெட்டா் வசதி கொடுத்து அதையும் கண்காணிப்பு அறையுடன் இணைத்து விட்டால் தவறு நடக்காமலும், மின்சாரம் தடைபடாமலும் செய்து விடலாம் என்று கருதுகிறோம். எனவே, அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
மதிமுக மாவட்டச் செயலா் ராஜேந்திரன், திமுக வடக்கு மாவட்டச் செயலா் செல்லத்துரை, தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு. பழனி நாடாா், சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் ஈ. ராஜா, வாசுதேவநல்லூா் மதிமுக வேட்பாளா் சதன் திருமலைக்குமாா், தென்காசி நகரச் செயலா் சாதிா், கீழப்பாவூா் மேற்கு ஒன்றியச் செயலா் சீனித்துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.