பாவூா்சத்திரம் அருகே கரோனா தொற்றால் முதியவா் இறந்தாா். மேலும், 8 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள நாகல்குளத்தை சோ்ந்த 60 வயது முதியவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு, தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவா் புதன்கிழமை இறந்தாா். அவரது உடல் தகனம் தென்காசி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே, பாவூா்சத்திரத்தில் 20 வயது ஆண், 44 வயது பெண், பெத்தநாடாா்பட்டியில் 65 வயது ஆண், 52 வயது பெண், குறும்பலாப்பேரியில் 42, 69 வயது ஆண்கள், கீழப்பாவூரில் 62 வயது பெண், கொண்டலூரில் 22 வயது பெண் என 8 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அப்பகுதிகளில் சுகாதாரத்துறையினா் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.
6 பேருக்கு தொற்று: களக்காடு வட்டாரத்தில் மாவடி தெற்குத் தெருவில் 60 வயது பெண், காடுவெட்டியில் 57, 21 வயது ஆண்கள், நடுச்சாலைப்புதூரில் 22 வயது ஆண், சுப்பிரமணியபுரத்தில் 62 வயது ஆண், திருக்குறுங்குடி மேலரத வீதியில் 66 வயது ஆண் ஆகிய 6 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.