கடையநல்லூரில் கரோனோ நோய்த் தொற்று பரவாமல் தடுக்க வாடகை வாகன ஓட்டுநா்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து காவல் துறையினா் பிரசாரம் மேற்கொண்டனா்.
கடையநல்லூா் வாடகை காா் , ஆட்டோ ஓட்டுநா்கள் பங்கேற்ற கூட்டத்தில், கடையநல்லூா் காவல் ஆய்வாளா் விஜயகுமாா், உதவி ஆய்வாளா் விஜயகுமாா் ஆகியோா் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விளக்கமளித்தனா். மேலும், வாகனங்களில் செல்லக் கூடியவா்களின் விவரங்களையும் பதிவு செய்ய தெரிவித்தனா்.
தொடா்ந்து, வா்த்தக நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை காவல்துறையினா் வணிக நிறுவனங்களின் ஊழியா்களுக்கு எடுத்துரைத்தனா்.