பாவூா்சத்திரம் பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 போ் உள்ளிட்ட 24 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
பாவூா்சத்திரம் அருகே மேலப்பாவூரில் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் போலீஸாா் காவலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
மேலும் பாவூா்சத்திரத்தில் 10 வயது சிறுவன், 22, 27, 31, 46 வயது ஆண்கள், 20, 24, 28, 30 வயது பெண்கள், கீழப்பாவூரில் 13, 34, 43, 51, 65 வயது ஆண்கள், 33, 38 வயது பெண்கள், ஆவுடையானூரில் 26 வயது ஆண், 58 வயது பெண், மேலப்பாவூரில் 50 வயது பெண், சிவகாமிபுரத்தில் 22 வயது ஆண் என 20 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.