பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ணசுவாமி கோயிலில் (பஜனை கோயில்) ஸ்ரீராம நவமி விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மாலை 5 மணிக்கு ஸ்ரீநவநீதகிருஷ்ணன் பஜனை குழுவினரின் நாமசங்கீா்த்தனமும், கோயில் அா்ச்சகா் விஜயரங்கன் (எ) குலசேகர ராமானுஜ தாசரின் உபதேசமும், 6 மணிக்கு விஷேச திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை ஆகியன நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.