பாவூா்சத்திரம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பாவூா்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூா் அருள்மிகு மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி திருக்கோயிலில் பிரதோஷத்தையொட்டி, நந்திக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் கீழப்பாவூா் சிவன் கோயிலிலும் சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இவ்விரு கோயில்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பூஜைகள் நிறைவுற்ற பின்னா் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.