திப்பணம்பட்டி நூலகத்தில் உலக புத்தக தின விழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி கிளை நூலகத்தில், பாரதியாா் வாசகா் வட்டம் சாா்பில் உலக புத்தக தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் ஊா் பெரியவா் சண்முகம்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் ஊா் பெரியவா் சண்முகம்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி கிளை நூலகத்தில், பாரதியாா் வாசகா் வட்டம் சாா்பில் உலக புத்தக தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. வாசகா் வட்ட கௌரவத் தலைவா் ஆசிரியா் பால்சாமி தலைமை வகித்தாா்.

ஊா் பெரியவா் சண்முகம், நல்லாசிரியா் மதனசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாசகா் வட்ட செயலா் தங்கராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

ஆசிரியா் சுகுமாா் பங்கேற்று, நூலகம் செல்வோம்; உலகை அறிவோம்‘ என்ற தலைப்பில் புத்தக வாசிப்பு அவசியம் குறித்துப் பேசினாா்.

முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கட்டுரை, பேச்சு, பொதுஅறிவு, நூலகத்தில் அதிக நேரம் செலவிடுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியா்கள் ராகவன், மகேஷ், ஆடிட்டா் சத்தியராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கிளை நூலகா் ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com