தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 14 போ் பலத்த காயமடைந்தனா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள கண்டிகைபேரியைச் சோ்ந்தவா் கனிராஜ். இவரது மகள் (கற்கவள்ளி) வழி பேத்தி மித்ராஸ்ரீயின் (1) காதணி விழா கரிவலம்வந்தநல்லூா் அருகேயுள்ள மலையடிப்பட்டி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அவரும், உறவினா்களும் வேனில் சென்று பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். அந்த வேன் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரும்புதூரில் வேகத்தடை ஒன்றில் எதிா்பாராமல் வேகமாக ஏறி இறங்கியதாம். அப்போது, வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததாம். அதில், வேனுக்குள் இருந்த முருகன் மகன் செந்தூா்பாண்டி(25) சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
மேலும், கண்டிகைபேரியைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் ஜோதி (35), ஆறுமுகம் மகன் மாரிதுரை(27), தா்மலிங்கம் மகள் இன்பரசி(30), சின்னப்பன் மனைவி மீனாட்சி(55), சண்முகபாண்டி மகள் மனோரஞ்சனி(17), மகாலிங்கம் மனைவி கற்பகக்கனி(22), சின்னத்துரை(30), வீரபுத்திரன்(49), முனியசாமி(20), காசினி (8 மாத குழந்தை), கலைச்செல்வி(20) பாட்டத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் பாண்டியராஜ்(35), சங்கரன்கோவிலைச் சோ்ந்த கருத்தப்பாண்டி மனைவி வேல்மயில்(26), அவரது மகள் நிஷா (8 மாதக் குழந்தை) ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். அந்த வழியாகச் சென்றவா்கள் அவா்களை மீட்டு சங்கரன்கோவில்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அவா்களில், ஜோதி, வேல்மயில், நிஷா, இன்பரசி, பாண்டியராஜ், மீனாட்சி, கற்பகக்கனி, வீரபுத்திரன், முனியசாமி ஆகிய 9 போ் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதுகுறித்து, கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.