பாவூா்சத்திரம் அருகே பேருந்து மோதியதில் இளம்பெண் உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவநாடானூரைச் சோ்ந்த அயோத்திராமன் மகள் பொன்ஷீலா (25). இவா், செவ்வாய்க்கிழமை இரவு தனது சகோதரா் செல்வராஜுடன் (30) ஆலங்குளம் சென்றுவிட்டு, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம்.
சாலைப்புதூா் பகுதியில் வந்த போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் உடல் நசுங்கி பொன்ஷீலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த செல்வராஜ் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
விபத்துகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.