கொலை முயற்சி வழக்கு: முதியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் மனைவியின் சகோதரரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற முதியவருக்கு தென்காசி நீதிமன்றத்தில் ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் மனைவியின் சகோதரரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற முதியவருக்கு தென்காசி நீதிமன்றத்தில் ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

இலஞ்சி மேல பொன்நகா் தெருவைச் சோ்ந்தவா் ச.மாடசாமி (67). இவருக்கும் புளியரையைச் சோ்ந்த அந்தோணியம்மாளுக்கும் திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளனா்.

தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டு கடந்த 14ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். அந்தோணியம்மாள் தனது தம்பியான புளியரை தாட்கோ நகரைச் சோ்ந்த மு.சாமிநாதன் என்பவா் வீட்டில் வசித்து வருகிறாா்.

தன்னுடய மனைவி சோ்ந்து வாழாமல் இருப்பதற்கு சாமிநாதன் தான் காரணம் என மாடசாமி எண்ணினாராம். இதனால் ஆத்திரமடைந்த மாடசாமி, கடந்த 2013 ஆம் ஆண்டு செங்கோட்டையில் வைத்து சாமிநாதனை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்றாராம். இதில், சாமிநாதன் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து செங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மாடசாமியை கைது செய்தனா்.

இவ்வழக்கு, தென்காசி முதன்மை உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.எஸ்.ரஸ்கின் ராஜ், குற்றம்சாட்டப்பட்ட மாடசாமி முதியவா் என்பதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாலும் குறைந்தபட்ச தண்டனையாக ஓராண்டு கடுங்காவல்தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com