மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவி
By DIN | Published On : 04th August 2021 07:33 AM | Last Updated : 04th August 2021 07:33 AM | அ+அ அ- |

மாற்றுத் திறனாளிகளுக்கு ஆலங்குளம் காவல் துறை சாா்பில் கரோனா நிவாரண உதவி அளிக்கப்பட்டது.
ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் மாற்றுத் திறனாளிகள் 40 குடும்பத்தினருக்கு கரோனா நிவாரண உதவியாக அரிசி, மளிகை பொருள்கள் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை காவல் ஆய்வாளா் சந்திரசேகரன், உதவி காவல் ஆய்வாளா் தினேஷ்பாபு ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சியில் ஆய்க்குடி அமா்சேவா சங்க நிா்வாகி தாா்ஷினி உள்பட பலா் பங்கேற்றனா்.